பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 51

1. குறிச்சி செப்பேடு

சிவகங்கைச் சீமையை கி.பி.1750 - 1772 வரை ஆட்சி செய்த முத்து வடுகனாத பெரிய உடையாத் தேவர் வழங்கியுள்ள அறக்கொடைகளுக்கான செப்பேடுகளில், நமக்குக் கிடைத்துள்ள முதலாவது செப்பேடு. திருவாவடுதுறை மடத்தில் மகேசுர பூஜை நடப்பிப்பதற்காக இந்த மன்னர் 10.6.1740-ல் வைகையாற்றுக்கு வடக்கே உள்ள குறிச்சி கிராமத்தை தான சாதனமாக வழங்கியதற்கான ஆவணம் இது. இந்த மன்னர் கி.பி.1750-ல் தான் ஆட்சிக்கு வந்ததாலும் இந்தப் பட்டயம் கி.பி.1740-ல் வழங்கப்பட்டு இருப்பதாலும் இதனை முத்து வடுகநாதத் தேவர் பெயரில், அவரது தந்தையார் அரசுநிலையிட்ட சசிவர்ணத்தேவர் வழங்கி இருத்தல் வேண்டும். இந்தப் பட்டயத்தில் கி.பி.1742ல் திருவாவடுதுறை மடத்திற்கு தானமளிக்கப்பட்ட சுந்தனேந்தல் பற்றிய செய்தியும் தொடர்ந்து பொறிக்கப்பட்டுள்ளது.


சிவகங்கைச் சீமையின் சமுதாய அமைப்பில் இருந்த மக்கட் பிரிவினர், மக்களிடமிருந்து பெறப்பட்ட அரசு இறைகள், சுங்கம் ஆகிய வருவாய் இனங்கள், மற்றும் நிலப்பிரிவுகள், ஆகியவைகளைத் தெரிவிக்கும் அரிய ஆவணமாகவும் இந்த தானசாதனம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(இந்தச் செப்பேடு திருவாவடுதுறை மடத்தில் உள்ளது.)

1. சுவத்திஸ்ரீமன் மகாமண்டலேசுரன் அரிய ராயிர தள விபாடன் பாசைக்குத் தப்பு வரா
2. யிர கண்டன் மூவாயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டி ம
3. ண்டலத் தாபனாசாரியன் சோள மண்டலப் பிறதிட்டாபனா சாரியன் தொண்ட மண்டல சண்டப்பி
4. றசண்டன் ஈளமுங் கொங்கும் யாள்ப்பாண பட்டணமும் யெம்மண்டலமுமளித்துக் கெசவே
5. ட்டை கொண்டருளிய ராசாதி ராசன் ராச பரமேசுரன் ராச மார்த்தாண்டன் இராசகுல திலகன்
6. ராய ராகுத்த மிண்டன் மன்னரில் மன்னன் மருவலர்கேசரி துட்டரில் துட்டன் துட்ட நெட்டூ.
7 ரன் சிட்டர் பரிபாலனன் ஒட்டியர் மோகந்தவிள்த்தான் துலுக்கர் தள விபாடன் வ
8. லியச் சருவி வழியில் கால்நீட்டி தாலிக்கு வேலி இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் வைகை வ
9. ளநாடன் ஆற்றுப் பாச்சி கடலிற் பாச்சி சேது நகர்காவலன் சேது மூலா துரந்தரன் இராமனாதசு
10. வாமி காரியதுரந்தரன் சிவபூசாதுரந்தரன் பரராசசிங்கம் பரராசகேசரி பட்ட மானங் கா