பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ако சீவக சிந்தாமணி - சுருக்கம் "ணம், நீபுராணம் என்பன மணிப்பிரவாள நடையிலும் உள்ளன என்பர். இவற்றுள் தேவரியற்றிய சிந்தாமணிக் குக் காலத்தால் முற்பட்டன. இவை, பிற்பட்டன. இவை என் பது நன்கு காணப்படவில்லை. சைனருட் சிலர் கத்திய சிந்தாமணி இதற்கு முதல் நூல் என்கின்றனர். மற்று, இதனைத் தேவரும் எடுத்தோதவேயில்லை. சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன்', இதன்னத் தெருண்டார்’ ஏற்றுக் கொண்டனர் என்றே கூறுதலால், சீவகன் வாலாறு தேவர் காலத்தே சமணருலகத்தில் பயில வழங்கிய தென்பதுமட் டில் இனிது தெரிகின்றது. சீவகன் பிறப்பு கோடாத செங்கோல் குளிர்வெண்குடைக் கோதை வெள்வேல் ஓடாத தானே உருமுக்குரல் - ஒடை யானே, வாடாத வென்றிமிகு சச்சந்தன் என்ப மன்னன்; வீடாத கற்பின் அவன்கேவி விசயை யென்பாள். இதன்கட் கூறிய சச்சந்தனுக்கும் விசயைக்கும் பிறந்த மகன் சீவகன். இவன் பிறந்த அன்றே சச்சந்தன் இறந்தான்; இவனும் தன்னைப் பெற்ற தாயை விட்டுப் பிரிந்து கந்துக் கடன் என்பவனல் வளர்க்கப்பட்டான். அச்சணங்கி என்ற 'பெரியோன்பால் எல்லாக் கலைகளும் கற்ருன்; ஒப்பா ரும் மிக்காரும் இல்லாத உயர்தனித் தோன்றலாய்ச் சீவகன் விளக்கமுற்ருன். விசயை தெய்வமொன்றின் துணையால் தண்டக வனத்துத் த்வப்பள்ளியில் தன் மகன் வாழ்க என நோன்பு நோற்கலுற்ருள். வளர்ப்பு - சீவகன் கலைபலவும் கற்றபின், ஆசிரியனல் தன் பிறப்பு வாலாறு உணர்ந்தான். ஆசிரியன் பணித்ததனுல், ஏற்ற காலம் வருமளவும், தன் பிறப்பு உண்மையினை வெளிப்படா வாறு மறைத்துக்கொண்டான். தந்தையாய் வளர்க்க கக்