பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதுமையார் இலம்பகம்101



“நண்பனிடம் கடன் வாங்கலாமே தவிர மொத்த மூலதனத்தை அவனிடம் எதிர்பார்க்கக் கூடாது; அது என் ஆண்மைக்கு இழுக்கு” என்றான்.

“உண்மைதான்; உழைப்பவனுக்குத்தான் தெய்வம் முன் வந்து உதவும், தெய்வத்தையே உழைக்க இதுவரை யாரும் சொன்னதில்லை” என்றான்.

“காலம், இடம், துணை இம்மூன்றையும் தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்பவனே வெற்றி பெறுவான்” எனறான்.

“உண்மைதான்; அதுவரை நாடுகளையும் மனிதர்களையும் காணவேண்டும். இன்னும் ஓராண்டுவரை தலை காட்டக் கூடாது என்று அச்சணந்தி ஆசிரியரும் கூறி இருக்கிறார். நான் பல தேயமும் காண விரும்புகிறேன்.”

“பயணத்துக்குக் கட்டுச்சோறு கட்டித் தருகிறேன்” என்றான்.

அவனுக்கு மூன்று மந்திரங்களை உபதேசித்தான். “வழிப்பயணத்துக்குப் பயன்படும்” என்றான்.

அவன் செல்லும் தேயத்தையும், கடக்கும் வழிகளையும் குறித்து விளக்கமாகக் கூறி வழி அனுப்பினான்.

கிணற்றுத் தவளையாக வாழ்ந்த சீவகன் அடிவானத்துக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கவனாக மாறினான். “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்று பாடிய கவிஞன், “மன்னும் இமயமலை எங்கள் மலையே” என்று பாடத் தொடங்கினான். சுதஞ்சணன் வழிகாட்ட அவன் காடும் மலையும் பல கடந்து நாடுகள் பல கண்டான். அந்தப் பயணத்தில் முதல்