பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136சீவக சிந்தாமணி



மறுநாள் அவர்கள் முயன்று பார்த்தார்கள்; சரியாக மாட்டிக் கொண்டார்கள்.

“நேற்று என்னைவிட்டு ஓடிவிட்டீர்களே! அதற்கு இது ஒரு பாடம்” என்று சொல்லி அவன் முன் இருந்து அவர்களை விடுவித்தான்.

இங்கே அந்த ஊர் அரச புத்திரர்கள் உச்சிக் கிளையில் ஒதுங்கி இருந்த கனியை நச்சியவர்களாய்க் குறி வைத்துக் கல் எறிந்து கொண்டிருந்தனர்; வைத்த குறிகள் அத்தனையும் தப்பி விட்டன. சீவகன் சென்றான்; ஒரே அடியில் அது அவர்கள் மடியில் விழும்படிச் செய்தான். ‘வைத்த குறி தப்பாத வைத்தியலிங்கம்’ என்று அவர்கள் பாராட்டத் தொடங்கினார்கள். அருகில் வந்ததும் அவர்கள் குரல் கம்மியது; மராமரம் ஏழினையும் வீழ்த்திய இராமன் என்று அவர்கள் அவன் மதிப்பை உயர்த்தினர்.

இவன் விற்பயிற்சி உடைய விசயனோ என்று வியந்தனர். இவனைச் சந்தித்தவன் பெயரும் விசயன் ஆகும். இவன் பெரிய வீட்டுப்பிள்ளை என்பதை அறிந்தான்; தன் இளமை நாட்களை அவன் கவனத்துக்கு வரப் பேச்சுத் தொடுத்தான்.

“எந்த ஊர்?”

“இராசமாபுரம்”

“சீவகனைத் தெரியுமா?

“அவன் என் நண்பன், நாங்கள் இருவரும்தான் அச்சணந்தி ஆசிரியரிடம் விற்பயிற்சி பெற்றோம். அவன் கந்துக்கடன் மகன்; அவர் வீட்டில்தான் அச்சணந்தி தங்குவார்.”

“துரோணனுக்கு ஒரு அருச்சுனன்போல சீவகன் அவருக்கு நான் ஒரு ஏகலைவன்; ஒருமுறை கற்றுக் கொடுத்தால் அப்படியே பிடித்துக் கொள்வேன். அவருக்கு என்