பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரமஞ்சரி இலம்பகம்155



வரையும் சந்திப்பதில்லை என்று விரதம் எடுத்துக் கொண்டவளாகப் பிரச்சாரம் செய்யப்பட்டாள்.

அடிக்கடி பெண் கேட்க வருபவரிடம்,

“அவள் அல்லி அரசாணி; அருச்சுனனுக்குத்தான் கழுத்தை நீட்டுவாள்” என்று சொல்லி வந்தார்கள்.

அவள் மட்டும் அடிக்கடி சுபத்திரைக்கு ஆள் அனுப்பி விசாரித்து வந்தாள்; அவள் குங்குமப் பொட்டுடன் பொலிவுடன் இருப்பதாக அறிந்தாள். அதனால் அருச்சுனன் தீர்த்த யாத்திரையில் இருந்து இன்னும் திரும்பி வரவில்லை என்று உறுதியாக இருந்தாள். தத்தையைக் கண்டவர் இந்தச் செய்தியை வந்து சொல்லிக் கொண்டிருந்தனர்.

தீர்த்த யாத்திரை முடிந்து வந்த அருச்சுனனிடம் அல்லியைப் பற்றி மெல்லக் கிளர்ந்தனர். அவன் தோழர்கள். அதற்கு வேண்டிய சூழ்நிலை வந்தது.

பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசுவது உண்டு; மார்பில் குங்குமம் அப்பிக் கொள்வது உண்டு; நானம் கமழ்வது உண்டு; இவன் மார்பு சிவந்து காணப்பட்டது.

“எந்தப் போர்க்களத்தில் இருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள்.

“இவள் நம் ஊர்ப் பெண்தான்; இதுவரை கவனிக்காதது என் தவறு தான்” என்றான்.

“நீ தொட்ட இடமெல்லாம் பொன் ஆகிறதே; எப்படி?” என்று கேட்டார்கள்.

“அவர்கள் விரும்புகிறார்கள் நான் என்ன செய்வது” என்றான்.

“நான் எவ்வளவோ முயற்சி செய்கிறேன்; ஒருத்தி கூடச் சீண்டமாட்டேன் என்கிறாளே” என்றான் புத்தி சேனன்.