பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164சீவக சிந்தாமணி



அவன் கொழுக்கட்டைபோல் இருப்பதைப் பார்த்து அவன் மனைவி சுநந்தைதான் கண்மூடி இருக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். விசாரிப்பதற்கும் எளிமையாகி விட்டது.

“நேற்றுவரை நன்றாக இருந்தார்களே! பட்டுப் புடவை உடுத்திக் கோயிலுக்கு வந்தார்களே; பொட்டும் பூவும் வைத்த அவர்களைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருப்பார்களே” என்று அவர்கள் தோற்றத்தை ஏற்றமுடன் பேசினார்கள்.

“போகும்போது நம்மிடம் சொல்லி விட்டா போகிறார்கள்” என்று முன்னுரை கூறினான் கந்துக்கடன்.

“ஏனுங்க அப்படிச் சொல்றீங்க?”

“நேற்றுக் கோயிலுக்குப் போனதாகச் சொன்னார்கள் என்னிடம் சொல்லிவிட்டா போனார்கள் என்று கேட்டேன். அவ்வளவு தான்.”

“சொல்லாமல் போயிட்டாங்களா?”

“போகலை, வீட்டிலே இருக்கிறார்கள்” என்றான்.

யார் போய்விட்டார்கள் என்று கேட்பது அநாகரிகமாக இருந்தது. அவர்கள் வீட்டைத் துருவித்துருவிப் பார்த்தனர்.

“என் தந்தைக்கு இன்று திதி; அவர் சென்றது இந்தத் தேதி, அது அவர் விதி, அவரை நினைத்துக் கொண்டு அழுதோம்” என்றனர்.

பழைய செய்தி இதில் எந்த சுவாரசியமும் காணவில்லை.

“இவ்வளவு தானா!”

“அதுக்குத்தான் அழுதோம்”

“எங்களால் அழமால் இருக்க முடியவில்லை.”