பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54சீவக சிந்தாமணி



மிகுதியாயினர். தேனை மொய்க்கும் வண்டு என மாந்தர் வந்து மொய்த்தனர்.

மன்னர் விழித்தாமரை பூத்த மண்டபத்தில் மின்னின் இடையும் அன்ன நடையும் உடைய தத்தை வந்து சேர்ந்தாள்; அவளுக்கு நெருங்கிய தோழி வீணாபதி முதற்கண் அவைக்கு வந்து திரையை விலக்கி முன் வந்து நின்றாள்.

நாடகங்களில் கட்டியங்காரன் ஒருவன் வந்து நடக்க இருப்பவற்றை நகைச் சுவைபடப் பேசுவான். அதுபோல இந்த நகையாளி அங்கு வந்து நின்றாள். அழகி என்றாலே வாய் திறக்கும் வாலிபர்கள் முதல் காட்சியே முழுக்காட்சியாகக் கண்டு மகிழ்ந்தனர். அவள் வேண்டுமென்றே அவை யோரை மயக்கும் வகையில் புன்முறுவல் காட்டி நின்றாள். அவள் சிரிப்பே காமவலையின் விரிப்பாக இருந்தது.

ஒருவன் சொல்கிறான் “இவள் தோளைப் பார்த்தீர்களா ! இவை மூங்கில்கள்” என்றான்.

மற்றொருவன் சொன்னான் “அவள் துணைப் புருவங்கள் வில்லே” என்றான்.

இன்னொருவன் பேசினான் “வாயே கடலில் விளையும் பவளம்” என்றான்; இன்னொருவன் கூறினான். “மேனி மாந்தளிர்” என்றான்.

மற்றொருவன் புதிய கண்டுபிடிப்பாகச் சொன்னான். “எல்லாம் இருக்கிறது. ஆனால் தனம் இல்லாத வறுமையைப் பாருங்கள். குத்தி முனைத்திருக்க வேண்டிய இடம். அங்குச் சுத்தமாக இருக்கிறது. இதைப்பத்தி என்ன சொல்லுகிறீர்கள்” என்றான்.

“தழை சுமப்பது பிழை என்று விட்டுவிட்டாளா என்ன” என்று ஒருவன் கிண்டல் செய்தான்.