பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




இறைவணக்கம்


மூவா முதலா உலகம் ஒரு முன்றும் ஏத்தத்
     தாவாத இன்பம் தலையாயது தன்னின் எய்தி
ஒவாது நின்ற குணத்து ஒள்நிதிச் செல்வன் என்ப
     தேவாதி தேவன் அவன் சேவடி சேர்து மன்றே -

- திருத்தக்கதேவர்


(மூன்று உலகமும் ஏத்தும் தன்மையன்; பேரின்ப வடிவினன்; உயர் குணங்கள் அனைத்தும் தாங்கியவன்; தேவர்களுக்கு எல்லாம் முதன்மையானவன்; அவன் திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக)