பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணமாலையார் இலம்பகம்89



ஏற்கனவே மணமனையில் உட்கார்ந்து பழகியதால் மணச் சடங்குக்கு விளம்பரம் அதிகம் தேவை இல்லாமல் இருந்தது. எப்பொழுது இந்தச் சடங்குகளிலிருந்து விடுபட்டு அவளைச் சந்திக்கப் போகிறோம் என்று காத்திருந்தான். இனிய மண முழவு ஒலி காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மலர்மாலை சுமந்து அவனுக்கு அது அலுத்து விட்டது.

அவர்கள் இருவரும் காதல் இன்பத்தில் மூழ்கினார்கள் என்றால் அது வழக்கமான விளக்கமாக அமையும். இன்பக் களிப்பில் இணைந்தார் என்றால் அது பொருத்தமாக இருக்கும். தாரும் மலையும் மயங்கின என்றால் அதைவிட அழகாக இருக்கும்; அரவு இரண்டும் பின்னிக் கொண்டு இணைந்தன என்றால் அது சிலப்பதிகாரக் காவியமாக மலர்ந்து விடும். அது அவர்கள் சொந்த விஷயம். அதில் நாம் தலையிட முடியாது என்பதால் அதிகம் சொல்லத் தேவை இல்லை.

ஒரு தலைவி சொன்னாளாம். “காலைப் பொழுது வந்தால் அது தன் தலைவனைப் பிரித்துவிடும்” என்று, “தோள் தோய் காதலரைப் பிரிக்கும் வாள் போல் வைகறை வந்தது” என்று சொன்னாளாம்.

இங்கே வைகறை வரவில்லை; கட்டியங்காரன் ஆட்கள் வந்து தொலைந்தனர். சீவகன் காந்தருவ தத்தையை மணந்தபோது. கட்டியங்காரனால் தடுக்க முடியாமல் போய்விட்டது. குணமாலை அவளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். அவள் தெருவில் நடந்தாலே போகும் வண்டிகள் சலனமற்று நின்றுவிடும் என்றனர்; அவளைப் பார்ப்பதில் மனம் செலுத்தி ஊர்திகளை நிறுத்தி விட்டனர்; அதனால் சில வண்டிகள் மோதிக் கொண்ட அசசெய்தி அவனுக்கு எட்டி இருக்கிறது.

இருதார மணத்தடை மசோதா கொண்டு வந்திருந்தால் இதைத் தடுத்து இருக்கலாமே என்று