பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 O வல்லிக்கண்ணன் முடியாத- அழுகை. ஒளி மயமாக மாற முயன்று: கொண்டிருந்த அந்த ஊர் நானாவிதஒலிகளின் அஞ்சல் நிலையமாகவும் விளங்கியது. மனிதரின் ஆக்கல் திறமைக்கு எடுத்துக் காட்டுகளாகத் தலை நிமிர்ந்து நின்ற வீடுகளும் பிறவும் அதே மனிதரின் அழிக்கும் சக்தியை விளம்பரப்படுத்தப்படுகின்ற சாதனங் களாக மாறிக் கொண்டிருந்த சூழ்நிலையிலே ஒதுங்கி நின்ற ஒற்றை வீடு ஒன்று. அதனுள் பயந்து ஒடுங்கிக் கிடந்த மனித உருவங்கள் இரண்டு. ஒன்று ஆண்; ஒன்று பெண். . அவன் கணவன். அவள் மனைவி. வாழ்க்கைத் துணைவர்கள்: கொடிய சோதனையாக எதிர்ப்படுகிற வாழ்க்கையில், தனித்தனியே பயந்து செத்துக்கொண்டிருக்கிற இரண்டு. பேர் ஒருவருக்கு ஒருவர் துணையாக முடியுமா என்ன? எப்படியாயினும், அவள் தனக்குத் துணையாகத் தன் கணவனையே நம்பியிருந்தாள். அவன்? .* வெளி உலகத்துப் பயங்கர ஓசைகளைக் காற்றெனும் துரதுவன் கொண்டுவந்து சுவரில் மோதி அடிக்கிறபோது அலறல்களும் அபாயக் கூச்சல்களும் வெறி ஒலிகளும் விம்மி எழுந்து பரவிப் பாய்கையில், அவற்றில் ஒரு பகுதியை சன்னல் வடிகட்டி உள்ளே செலுத்தும் போது அதே தெருவில் காலடி ஓசைகள் திடும் திடுமென ஒலிக்கும்போது- . வழியோடு போகிற வீணர்களில் எவராவது விளையாட்டாகக் கைத்தடியைச் சுழற்றிச் சுவர் மீது