பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 O வல்லிக்கண்ணன் அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை ஒரு கணம், விரல்களால் கண்களை துடைத்து விட்டு நன்றாகக் கவனித்தார். அவனேதான். அவன் பார்வையும் அவர் முகத்தைத் தொட்டது. உடனடியாக அவன் தன்முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான். வாழ்க்கையின் விசித்திர விள்ையாட்டை புரியவைக்கும் மற்றொரு சம்பவம்தான் இதுவும் என்ற எண்ணம் சுந்தரத் தின் மனசில் வெடித்தது இப்போது. 酪