கதந்திரப் பறவைகள் C 59 இருட்டில் வாழ்கிற பூச்சி திடீர்வெளிச்சம் தாக்கியதும் செயலற்றுத் திணறித் தவிப்பது போல அவரும் திண்டா டினார். இதோ மோட்டார் பைக்... இதோ இதோ ஆட்டோ ரிக்ஷா... மோதப் போகிறது: சாகப் போகிறோம். அட பாவிகளா என்று அலறி விட்டதாக நினைத்தார். வாயை திறந்து திறந்து மூடினாரே தவிர அவரால் எந்த ஒலியும் எழுப்ப இயலவில்லை. - கிரீச்சிட்டு நின்றது ஆட்டோ. ஸ்டன் பிரேக் போட்டுத் திறமையாக வண்டியை நிறுத்திவிட்டார் அதன் டிரைவர். - - மோட்டார் பைக் ஆசாமி சிறிது வெட்டி முறித்துத் தன் வண்டியை விலக்கி வழி மேல் சென்றார். மடைவன்: ரோட்டிலே ஒரமா நடக்கணும்கிற அறிவு இல்லே?" என்று திட்டிக் கொண்டே பறந்து போனார். அவர் அவசரம் அவருக்கு: - - ஆட்டோ ரிக்ஷா டிரைவரும் ஏன்யா, வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டியா? பார்த்துப் போ!' என்து உபதேசித்து விட்டு, வண்டியை நகர்த்தி ஒட்டிச் சென்றார். - சிவசிதம்பரத்தின் உடல் படபடப்பு குறையவில்லை. நெஞ்சு திக் திக்கென்று அடித்தது. ஒருவித பயம் உள்ளில் நிறைந்திருந்தது. சாவு நெருங்கி வந்ததில் சிறிதளவு சந்தோஷம் கூட அங்கே தலை காட்டவில்லை. நல்லவேளை, பிழைத்தோம் என்ற திருப்திதான் இருந்தது. # அவர் நின்று, கவனித்து, நிதானமாக ரோடு ஓரத்தில் நடக்கலானார், சாவு பற்றி சர்வசாதாரணமாக எண்ணி னாலும், சாவை வரவேற்று எதிரேற்க நாம் தயாராக இல்லை. பயம் தான் முந்துகிறது. உயிராசை வலியது சாவை வரவேற்று சகஜமாக எதிர்கொள்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.
பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/61
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை