பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் 0 வ கொடுப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது; உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்வதில் ஒரு இன்பம் கிட்டுகிறது என்று கண்டு கொண்டது சிவசிதம்பர உள்ளம். ஒரு நாள், எதிர்வீட்டுக் குழந்தை அவர் வீட்டு வாசல் படியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தது. வெளியே போய் விட்டு வந்த சிவசிதம்பரம் நின்று, என்ன விஷயம்? ஏன் அழுறே? என்று கேட்டார். முன்பென்றால் எரிந்து விழுந்திருப்பார். போ மூதேவி. இங்கே ஏன் உட்கார்ந்திருக்கே?' என்று கத்தியிருப்பார். ஏழு வயதுச் சிறு பெண். சுமாரான அழகு. கண்களில் ஒரு குறுகுறுப்பு. அது அழுது கொண்டே சொன்னது. 'அம்மா அடிச்சா. நோட்டு வாங்கணும். தோட்டு இல்லாமப் போனா, உச்சர் அடிப்பாங்க... அது விம்மியது. - - சிறுபிள்ளையாய் இருப்பதும் கவலையில்லாத, சந்தோஷமே மிகுந்த விஷயமில்லை; அந்தப் பருவத்துக்கும் எத்தனையோ கவலைகள், பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன: சிவசிதம்பரம் இப்படி எண் ணிக் கொண்டார். மெது மெதுவாகப் பேச்சுக் கொடுத்து, சிறுமியின் தேவையைப் புரிந்து கொண்டு, அதை அழைத்துப் போய், கடையில் ஒரு தோட்டு வாங்கிக் கொடுத்தார். மிட்டாயும் வாங்கித் தந்தார். - சிறுமியின் அழுகை போன இடம் தெரியாமல் மறைந்தது. அதன் முகம் சந்தோஷத்தின் அழகுப் பூ ஆயிற்று. அதன் கண்களில் விசேஷ ஒளி சுடரிட்டது. . . . . ." . இங்கிலிஷ் மீடியம் ஸ்கூல் மாணவியாக இருந்தால் தேங்க்ஸ் தேங்க் யூ என்று திரும்பத் திரும்பச் சொல்லி