பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 9 நாட்டைப் பாதுகாக்க நாட்டுப்பற்றும் ஒற்றுமை :ணர்ச்சியும் மட்டுமே போதுமா? எதையும் தாக்குப் இடிக்கும் திறனும் உடல்வலிவும் இருந்தால் அல்லவா அவர்கள் முழுத்தொண்டாற்ற முடியும்? உடல் வலி ஆள்ள மக்களைப் பெறுவது எவ்வாறு? நினைத்தவுடன் பெறமுடியுமா? அவர்களே நாமே உருவாக்கவேண்டும். எப்படி உருவாக்குவது? தக்க பயிற்சியால். பல்லாண்டு தொடர்ந்து பயிற்சி கொடுத்து உருவாக்கவேண்டும். .எனவே, உடற்பயிற்சியில் கூடுதலான கவனஞ் செலுத்த வேண்டும். மாணவ மாணவிகளெல்லாம் போதிய உடற்பயிற்சி பெற்று உடல் வலிமை மிக்கவர்களாக வனாவேண்டும். நம் பையன்களும் பெண்களும் எப்படி யிருக்க விரும்ப வேண்டும்? எலும்புந்தோலுமாய்க் குச்சிபோலிருக்கவா? அசைந்தாடும் மலர்க்கொடியாக இருக்கவா? இவையெல்லாம் கற்பனைக்கு வேண்டு 'மருள் சரி. ஆனுல் வாழ்க்கைக்கோ? பாரதியார் வேண்டியதுபோல அரிவாளேக்கொண்டு பிளந்தாலும் கட்டு: ; உடல் உறுதி வேண்டும். திரு. வி. க. க. தியதுபோல் எஃகு நரம்பும், ஏக்கழுத்தும், தடை படக்குருதி ஓட்டமும் உடையவர்களாகத் திகழ்தல் வேண்டும். ஆண்கள் மட்டுமா இவ்வாறு திகழ வேண்டும்? இல்லை. இல்லை. பெண்களும் இவ்வாறே இருக்க வேண்டும். உடல் வன்மை போர் வீரர்களுக்கும் ஊர் வீரர்களுக்கும் மட்டுமா? அலுவலர்களுக்கும் தேவை. தொழில் செய்வோருக்கும் தேவை. எல்லோருக்கும் இன்றியமையாத உடல் வலிமையை எப்போது பெறுவது? இளமையில்தானே பெற முடியும்.