பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 விரத்தையும் வலிமையையும் சோதிக்கும் இவ்விளையாட்டு பல நூற்றுண்டுகளாக நடந்துவரும் ஒன்ருகும். "எவன் ஒருவனுடைய உணவும் வேலேமுறையும் உடற்பயிற்சியும் ஒழுங்காக அமைக்கப்பட்டுள்ளனவோ, எவன் ஒருவனுடைய உழைப்பும் ஓய்வும் பொருந்துவன வாக உள்ளனவோ, எவன் ஒருவ னுடைய துங்கும் நேரமும் உழைக்கும் நேரமும் முறைப்பட வ ரையறுக்கப்பட்டிருக் கின்றனவோ அவனுக்கே உலகில் சிறந்த பயன்கள் கைகூடும்” என்பது கிதோபதேசம். இந் நல்லுரைகளே அறிந்தால் போதாது. பின்பற்று வது மிக முக்கியம். எனவே, நாம் உழைக்கவும் தெரிந்து, விளேயாடவும் தெரிந்து, உடல் நலமும் உள்ள உரமும் அறிவுத் தெளிவும் பெற்று இன்புற்று வாழ, தேசிய விளையாட்டுவாரம் தூண்டுவதாக