பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆங்கி லேயர் படையில் சேர்ந்தே
        அதிக மான இந்தியர்,
ஆள்வ தற்கே உதவி செய்தார்,
        அந்தோ, வயிறு வளர்க்கவே!
ஏங்கி நிற்கும் மக்கள் நிலையை
        எடுத்துக் காட்டி அவரிடம்
எதிர்த்துப் புரட்சி செய்ய வேண்டும்
        என்று சிலரும் தூண்டினர்.


இந்து முஸ்லிம் மக்கள் தம்மை
        இழிவு படுத்தி வந்தனர்.
'இன்ப மெல்லாம் உதவு வோர்க்கே'
        என்றும் ஆசை காட்டினர்.
இந்தக் கொடுமை கண்டு மக்கள்
        இதயம் கொதிக்க லாயினர்.
இவைக ளாலே சுதந்தி ரப்போர்
        எரிம லைபோல் எழுந்ததே!