பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணைப் போல உடை தரித்தே
        அரசி ஒருத்தி வந்தனள்.
அச்சம் இன்றிக் குதிரை ஏறி
        அமர்ந்து யுத்தம் செய்தனள்.
ஜான்ஸி ராணி அவளே. வீரச்
        சண்டை போட்டும், ஐயகோ!
சமயம் பார்த்து முதுகில் ஒருவன்
        தாக்கிக் கொன்று விட்டனன்!


ஜான்ஸி ராணி போலப் பலரும்
        சண்டை யில்ம டிந்தனர்.
தாயைப் போன்ற நாட்டைக் காக்கச்
        சகல மும்து றந்தனர்.
ஆண்மை யோடு போர் புரிந்தும்
        அரிய புதிய கருவிகள்,
அவர்க ளேப்போல் நமக்கும் இல்லை.
        ஆத லாலே வென்றனர்!