பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெற்றபொன் னாட்டினிலே-வந்து
        மற்றவர் ஆளுவது
முற்றும் அநீதியன்றோ ?-நாட்டை
        மீட்க வேண்டுமன்றோ?


அறிஞர்கள் கூடினரே-கூடி
        அமைத்தனர் காங்கிரசை,
உரிமைகள் கேட்டனரே-சுதந்திர
        உணர்ச்சி ஊட்டினரே.


காங்கிரஸ் மாசபையும்-தோன்றக்
        காரண மாயிருந்தார்
ஆங்கில நாட்டினிலே! -பிறந்த
        அறிஞர் ஹ்யூம்என்பார்.


உயரிய கொள்கையுடன்-பலரும்
        உழைத்தனர் காங்கிரசில்.
‘சுயராஜ்யம்’ என்றசொல்லை--முதலில்
        சொன்னவர் நெளரோஜி !


‘இன்ப சுதந்திரமாம்-அது
        எங்கள் பிறப்புரிமை!’
என்றார் திலகருமே-தட்டி
        எழுப்பினர் மக்களையே.