பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“நாடு நமக்குச் சொந்தம்-இதில்
        நம்மவர் யாவரையும்
ஆடுகள் மாடுகள்போல்-இவர்கள்
        அடக்கி ஆளுவதோ ?


அந்நியர் இங்குவந்தே-நம்மை
        அந்நியர் போல்நடத்த
வெந்ததே உள்ளமெல்லாம்-உடனே
        வீறிட்டு நாம்எழுவோம்.”


என்றார் சிதம்பரனார்-கேட்டு
        எழுந்தார் இளைஞரெல்லாம்.
கண்களைப் போன்றதுவாம்-விடுதலை
        காணத் துடித்தனராம்.


வங்காளி பங்கிம்சந்த்ரர்-சொன்ன
        ‘வந்தே மாதரமே’
எங்கும் ஒலித்ததுவாம்-கேட்டே
        எதிரிகள் சீறினராம்.


பாட்டுக்கள் பாடியுமே-நமது
        பாரதி மக்களுக்கே
ஊட்டினர் தேசபக்தி-வீர
        உணர்ச்சியும் பொங்கியதாம்.