பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சுதந்திர நல்லுணர்வை-நாட்டில்
        தூண்டிய தலைவர்களை
விதவிதக் கொடுமைகளால்-அந்தோ!
        வெள்ளையர் வாட்டினரே.


அருமைத் தலைவர்களை-தினம்
        அடித்து நொறுக்கிவந்தார்.
சிறையில் அடைத்துவைத்தார்-அங்கே
        சித்ரவதைகள் செய்தார்.


சொந்தமாம் நாட்டினுக்கே-வீர
        சுதந்திரம் கேட்டவரை
அந்நிய தேசத்திலே -கொண்டுபோய்
        அடைத்து வைத்தனரே


மக்களைச் சுட்டனரே-பலர்
        மாளவும் செய்தனரே.
அக்கிர மங்கள்செய்தே-மேலும்
        ஆட்சி நடத்தினரே !