பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமரசம் பேசினர் வெள்ளையர்கள்.
        தலைவர்கள் யாவரும் ஒர்முகமாய்,
“எமக்குச் சுதந்திரம் வேண்டுமன்றி
        எதையும் விரும்பிடோம்” என்றனரே.


‘இன்னும் அடக்கிநாம் ஆளுவதோ
        இயலாத காரியம்’ என்பதனை
நன்ரறாய் உணர்ந்தனர் வெள்ளையர்கள்
        “நாங்களே போகிறோம்” என்றனரே!


‘இருநூறு ஆண்டுகள் ஆண்டுவிட்டோம்.
        இனியும் முடியாது’ என உணர்ந்தே
அருமைத் தலைவர்கள் கைகளிலே
        ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்தார்.


மக்களுள் மாணிக்கம் நேருஜியும்
        மதிநுட்பம் மிக்கநம் ராஜாஜியும்
பக்க பலமாக ராஜன்பாபு
        பட்டே லுடன்பொறுப் பேற்றனராம்.