இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
‘அன்னை விலங்கு முறிந்ததே !
அடிமை வாழ்வும் அகன்றதே!’
என்றே எண்ணி நாமுமே
இன்று பெருமை அடைகிறோம்.
சாந்தப் போரின் சக்தியை,
தருமப் போரின் வெற்றியை
காந்தி சொன்ன வழியிலே
கண்டோம் நமது நாளிலே!
மக்க ளுக்கு மக்களால்
மக்கள் ஆளும் நாட்டிலே
தக்க முறையில் வாழுவோம்;
தலை நிமிர்ந்து செல்லுவோம்.
ஆட்டம் ஆடி மகிழுவோம்;
பாட்டுப் பாடிப் புகழுவோம்;
கூட்டம் கூட்ட மாகவே
கொடி வணக்கம் செய்குவோம்!