பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘அன்னை விலங்கு முறிந்ததே !
        அடிமை வாழ்வும் அகன்றதே!’
என்றே எண்ணி நாமுமே
        இன்று பெருமை அடைகிறோம்.


சாந்தப் போரின் சக்தியை,
        தருமப் போரின் வெற்றியை
காந்தி சொன்ன வழியிலே
        கண்டோம் நமது நாளிலே!


மக்க ளுக்கு மக்களால்
        மக்கள் ஆளும் நாட்டிலே
தக்க முறையில் வாழுவோம்;
        தலை நிமிர்ந்து செல்லுவோம்.


ஆட்டம் ஆடி மகிழுவோம்;
        பாட்டுப் பாடிப் புகழுவோம்;
கூட்டம் கூட்ட மாகவே
        கொடி வணக்கம் செய்குவோம்!