பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேச நலனை எண்ணி, எண்ணிச்
        சிறையிலே உழன்றவர்.
திரணமாக எண்ணி உயிரைத்
        தியாகம் செய்து சென்றவர்,
பாசங் கொண்டு நாட்டுக் காகப்
        பாடு பலவும் பட்டவர்
பலரை யும்ம னத்தில் வைத்துப்
        பக்தி யோடு போற்றுவோம்.

***



சுதந்தி ரத்தை வாங்கித் தந்த
        தலைவர் வாழ்க, வாழ்கவே!
துணைவராக நின்று ழைத்த
        தொண்டர் வாழ்க, வாழ்கவே!
விதம்விதமாய்த் துன்ப முற்ற
        வீரர் வாழ்க, வாழ்கவே!
விடுதலேயைப் பெற்ற நாமும்
        இனிது வாழ்க. வாழ்கவே!