பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



செல்வம் திரட்டினர் கம்பெனியார்-பின்னர்
        சென்னை நகரையும் வாங்கினராம்.
மெல்ல மெல்ல இந்த நாட்டினிலே-அவர்
        மிக்க பலத்தினைப் பெற்றனராம்.


இமய மலைமுதல் குமரி முனைவரை
        எல்லா வளமும் நிரம்பியதாய்
நமது நன்னாடும் இருந்ததனால் -அவர்
        நாட்டின்மேல் ஆசையும் கொண்டனராம்.


அந்தச் சமயத்தில் இந்திய தேசத்தை
        அரசர்கள் பற்பலர் ஆண்டுவந்தார்.
அந்த அரசர்கள் தங்களுக் குள்ளேயே
        ஆயிரம் சண்டைகள் போட்டுவந்தார


அரசர் இரண்டுபேர் சண்டையிட்டால்-உடன்
        ஆனந்தங் கொள்ளுவர் ஆங்கிலேயர்.
ஒருவர்மேல் ஒருவரை ஏவிவிட்டே-நாட்டில்
        ஒற்றுமை தன்னைக் குலைத்துவந்தார்.