பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒற்றுமை தன்னைக் குலைப்பதுவும்-பகை
        ஓங்கிடச் சூழ்ச்சிகள் செய்வதுவும்
மற்றவர் சொத்தை விழுங்குவதும்-தினம்
        வழக்கமாய்ப் போனது வெள்ளையர்க்கே.


தராசு பிடித்திட வந்தவர்கள்-கையில்
        சண்டைத் துப்பாக்கி பிடித்தனராம்!
        இராஜ்ஜிய மெல்லாம் கவர்ந்தனராம்-இந்த
நாட்டை அடிமைப் படுத்தினராம்!

***



சுதந்தி ரத்தை இழந்த மக்கள்
        துன்பம் பெரிதும் அடைந்தனர்.
தொழில்கள் யாவும் நசித்த தாலே
        சோறும் இன்றி வாடினர்.
அதர்ம மாக வரிகள் பலவும்
        அந்நி யர்கள் போட்டனர்.
அரசர் கூடக் கப்பம் கட்டி
        அடங்கி ஒடுங்கி வாழ்ந்தனர்.