இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
“அடிமை யாக வைத்து நம்மை
அந்நி யர்கள் ஆள்வதோ?
அரட்டி உருட்டி வரிகள் கேட்க
அமைதி யின்றி வாழ்வதோ ?
உடனே இந்தக் கொடுமை தன்னை
உறுதி யோடு நானுமே
உயிர்இ ருக்கும் வரைஎ திர்ப்பேன்.
ஒருவ ருக்கும் அஞ்சிடேன்”
என்றுகூறிச் சிங்கம் போலே
எதிர்த்த கட்ட பொம்மனை
அன்று நமது மன்னன் ஒருவன்
ஐயோ, காட்டிக் கொடுத்தனன் !
கண்ணைப் போலச் சுதந்தி ரத்தைக்
கருதும் கட்ட பொம்மனின்
கழுத்தில் கயிறு மாட்டிக் கொன்ற
கதையைக் கேட்பின் உருகுவீர்!