பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“அடிமை யாக வைத்து நம்மை
        அந்நி யர்கள் ஆள்வதோ?
அரட்டி உருட்டி வரிகள் கேட்க
        அமைதி யின்றி வாழ்வதோ ?
உடனே இந்தக் கொடுமை தன்னை
        உறுதி யோடு நானுமே
உயிர்இ ருக்கும் வரைஎ திர்ப்பேன்.
        ஒருவ ருக்கும் அஞ்சிடேன்”


என்றுகூறிச் சிங்கம் போலே
        எதிர்த்த கட்ட பொம்மனை
அன்று நமது மன்னன் ஒருவன்
        ஐயோ, காட்டிக் கொடுத்தனன் !
கண்ணைப் போலச் சுதந்தி ரத்தைக்
        கருதும் கட்ட பொம்மனின்
கழுத்தில் கயிறு மாட்டிக் கொன்ற
        கதையைக் கேட்பின் உருகுவீர்!