பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 6H, O-H-60O,--SUN’S ENERGY-> நீர் - கரிவளி - சூரிய ஆற்றல்Ce H 1 2 Og + 6O2 t சர்க்கரை-உயிர்வளி : இச்சமன்பாடுகொண்டு ஒளிச்சேர்க்கையின் உண் மையை அறியலாம். இவ்வொளிச்சேர்க்கை பகற் பொழுதில் பச்சை நிறமுள்ள தாவரங்கள் அனைத் திலும் நிகழ்ந்துவருகின்றது. இதைப்போல அன்பே தன்னுயிராக உள்ள பெரியோர் உடம்பில், சிவமே பொருளென உணர்ந்து அழுதுதிற்குந் தருணத் தில், சுத்தகுடு நிறைவுபெற்றபோது, ஆண்டவன் அருள் கதிர்நலமாகக் கண்ணிலும் 'ஆதித்தர் பன் னிருவர் ஒளிமாற்றும் பரவொளி” யாக மனத் திலும், அருளொளியாக அறிவிலும் காரியப்படும். அப்போது அவரது உடம்புயிரோடு உளமும் ஒளி மயமேயாகிப் பொன்னுருவெனப்படும் அன்புருவ மாக மாறி ஒளிரும். இந்த உடல்மாற்றத்தை அடிகள் பலவாருக விளக்கியுள்ளனர். என்னை யும் பொருளென எண்ணியென் னுளத்தே அன் ையு மப்பனு மாகிவிற் றிருந்து உலகியல் சிறிது முளம்பிடி யாவகை அலகில்பே ரருளால் அறிவது விளக்கிச் சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா துறுநெறி உணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து சாகாக் கல்வியின் தரமெலா முணர்த்திச் சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்