பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நினைவு கூரத் தக்கன, "அன்பின் சிறந்தாயதோர் பூசனை யார்கண் உண்டோ' என்னும் கம்பரின் பாடல் பகுதி, அன்புடையார் பிறர்க்கு உரியர்' என்னும் குறள் பகுதியில் அடங்கியுள்ளது. கம்பர் தம் நூலில் வேறு பல இடங்களிலும் திருக்குறள் கருத்துகளையும் தொடர்களையும் எடுத்தாண்டுள்ளார். இதனால், திருக்குறளின் பரவல் பெருமை புலனாகும். மற்றும், கம்பர் போன்ற பெரும் புலவர்கள் திருக்குறளை நன்கு பயின்றுள்ளனர் என்பது தெளிவு.