பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 'அற்புதன் அரக்கர்தம் வருக்கம் ஆசார விற்பணி கொண்டு அருஞ்சிறையின் மீட்டநாள் இற்புகத் தக்கலை என்னில் யானுடைக் கற்பினை எப்பரிசு இழைத்துக் காட்டுகேன்!' (20) சீதை இவ்வாறெல்லாம் புலம்புவது, அயோத்தியில் முடி குடிக் கொண்ட பின்பு, இராமன் சீதைமேல் ஐயம் கொண்டு காட்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் கதைக்கு ஒரு முன்னோட்டம் போல் தோன்றுகிறதன்றோ?