அய்யா
ஏற்காடு மலைமீதில் சற்று கின்றே
எழில்சிலிர்க்கும் வளங்கண்டு மகிழும் போதில்ஏற்காத கொள்கைகளைச் சொல்லிச் சொல்லி
இடித்துரைத்த அய்யாவின் நினைவு தோன்றத்தோற்காது கேட்காது செவிடாய்ப் போன
துணிவற்ற மனிதர்மேல் இரக்கங் கொண்டேன்! தோற்காத கொள்கைகளா அன்று சொன்னர்?
தொல்லுலகம் மறுத்ததெல்லாம் இன்று நம்பும்!
மேட்டுரின் மேல்நிலையில் ஏறிப் பார்த்தேன்- வேகமுடன் விரைகின்ற வெள்ளம் என்ன
காட்டாரு, கட்டுப்பா டின்றிப் போக?
கட்டிவைத்த பேரண தன் சுவர்த்தடுப்பால்
ஒட்டத்தை மிதப்படுத்திப் பாய்வி ரிப்பாய்,
ஒர்புறமாய் வெளிவிடுமே-அதுபோல் அன்ருே
ஊட்டமுள்ள பகுத்தறிவுச் சத்தைத் தேக்கி -
ஒழுங்குடனே வகுத்தளித்துச் சென்ருர் அய்யா!
சென்றரென்றுரைத்தேனே? எங்கே சென்ருர்?
செல்வதெனில், எங்கிருந்தோ வந்தால் தானே? ஒன்ருகி, இக்காட்டின் உயிர் ஊன் ஆகி,
உடலாகி, கடமாடி உணர்வு தந்தார்! நன்ருக அவருரையைப் புரிந்து கொண்டால்
கலிவேது? பொலிவிழந்து தேய்தல் ஏது? குன்ருத வாழ்வுகமைத் தொடர வேண்டில்
கொள்கையெனத் தந்தவற்றை மறக்க லாமா?
99