ஈயாமல், இரங்காமல், இருமல் தும்மல்
எழுந்தால் கை நீளாமல் இருப்போர் நெஞ்சில் ஓயாமல் ஒழியாமல் அமைதி என்றும் -
உறங்காமல் தங்குமென்ரு நினைக்கின் றீர்கள்? சாயாமல் சரியாமல் மணலின் கோட்டை
தாழாமல் வீழாமல் உயர்ந்தா தோன்றும்? மாயாமல் வியாமல் காயா மல்தான்
காவாமல் போவாரேல் தோற்பார் மல்லர்!
உண்ணுமல் உடுக்காமல் உறைவிடத்தில்
உலவாமல் உதவாமல் பொது லத்தை எண்ணுமல் கல்லாரோ டிணையா மல்போய்
ஏங்காமல் நீங்குவரேல் கண்ணிர் வெள்ளம் கண்ணுமல் நெருங்காமல் அன்பு மல்கி
நனயாமல் உலராமல் கயத்தல் கூடும்! பண்ணுமல் செய்யாமல் வருமா பண்டம்? பாராமல் கேளாமல் ஏது சாட்சி?
ஊற்ருமல் முகக்காமல் ஏற்றம் இல்லை;
உயர்த்தாமல் இறக்காமல் ஏணி இல்லை; போற்ருமல் புகழாமல் பக்தன் இல்லை,
புரியாமல் தெரியாமல் உரைநூல் இல்லை; துாற்ருமல் இகழாமல் பகையே இல்லை,
துணியாமல் உழைக்காமல் வெற்றி இல்லை; சாற்ருமல் எழுதாமல் கவிதை இல்லை;
சலியாமல் படிப்போர்க்குக் காதுக் கம்மல்!
62