பக்கம்:சுயம்வரம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

107



தொடர்ந்து செல்வது தடைப்பட்டுப் போனாலும் போகலாம். அதைவிட தக்க சமயத்தில் அவரைத் தடுத்து நிறுத்தி, அவரிடம் தன் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதே நல்லது!...

இந்த முடிவுக்கு வந்த அவளுக்கு, இன்னொரு வாய்ப்பும் வாய்த்தது. அதாவது, திருமண அழைப்பிதழில் கண்ட மதனாவை அவள் நேருக்கு நேராகப் பார்த்தும் விட்டாள்

இனி என்ன?...

இந்தக் கேள்வி அவள் உள்ளத்தில் எழவில்லை. எழுந்து இருந்திருந்தால் அத்தானின் திருமண அழைப்பிதழைப் பார்த்த பிறகும், அவன் தனக்கு மனைவியாக வரித்துக் கொண்டு விட்ட மதனாவை நேருக்கு நேராகப் பார்த்த பிறகும், தெரிஞ்சு போச்சு, எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு!" என்று அவள் அவனைப் பச்சைக் குழந்தை போல் சுற்றிச் சுற்றி வந்து வட்டமடித்திருப்பாளா?...

பாவம், தன் வசீகரத்தால் வாழ்க்கையையே உயிரற்ற தாக்கிவிடும் நாகரிகம் அவ்வளவு தூரம் எட்டாத ஏதோ ஒரு பட்டிக்காட்டில் அவள் பிறந்தவள்; எதற்கும் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்' என்பதற்காக எட்டாம் வகுப்பு வரை படித்தவள்; அதற்குள் வயதுக்கு வந்துவிட்ட காரணத்தால் பள்ளிப் படிப்புக்குத் தன் பெற்றோரால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டவள். அதற்கு மேல் அவள் படித்ததைவிட கேட்டதுதான் அதிகம். அதிலும் என்ன கேட்டாள்? 'பழைய குப்பைகள் என்று பட்டனத்து மனிதர்களால் அநேகமாக ஒதுக்கித் தள்ளப்பட்டு விட்ட பெரிய புராணக் கதைகள், ராம காதை, மகாபாரதம், இத்தியாதி, இத்தியாதி...

இவற்றிலிருந்து தான் பெற்ற அறிவைக் கொண்டு, அவள் தன்னையும் 'திலகவதியின் பரம்பரையைச் சேர்ந்தவளாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/110&oldid=1384882" இலிருந்து மீள்விக்கப்பட்டது