110
சுயம்வரம்
அழைத்துச் செல்லலாமா? அது ஏன் உங்களுக்குப் புரியவில்லை?" என்றாள்.
அதுவும் எனக்குப் புரியத்தான் செய்கிறது. ஆனால் இப்போதைக்கு உன் அம்மாவிடமிருந்து நீயும் நானும் தப்ப வேண்டுமானால் நாம் இருவரும் சினிமாவுக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை' என்றான் அவன்.
இனி என்ன, இனி என்ன? என்று நினைத்துக் கொண்டே வந்த மாதவன், சினிமா தியேட்டரை நெருங்கியதும் அந்த நினைப்பிலிருந்து சற்றே நழுவிக் கவுண்ட்டரில் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் இரண்டை வாங்கிக் கொண்டு, 'இதற்கு முன்னால் நீ ஏதாவது இங்கிலீஷ் படம் பார்த்திருக்கிறாயா?" என்றான் நீலாவை நோக்கி,
“'இல்லை'” என்றாள் அவள்.
“அப்படியானால் அதைப் பார்ப்பதற்கு முன்னால் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமே நீ'” என்றான் அவன்.
“"அது என்ன விஷயம்?'” என்றாள் அவள்.
"படம் பார்க்கும்போது நீ படத்தைக் கவனிக்கிறாயோ இல்லையோ, பக்கத்தில் உள்ளவர்களைக் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். அவர்கள் 'ஆஹா என்றால், நீயும் 'ஆஹா' என்று சொல்லவேண்டும். அவர்கள் ஒஹோ என்றால், நீயும் ஒஹோ என்று சொல்லவேண்டும்; அவர்கள் 'வொன்டர்புல்' என்றால், நீயும் வொன்டர்புல்' என்று வியக்க