பக்கம்:சுயம்வரம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

சுயம்வரம்


இருந்த இன்னொருவர், "சீச்சீ! ஆபாசம், மகா ஆபாசம்!" என்றார் தம் மூக்குக் கண்ணாடியை எடுத்து ஒரு முறைக்கு இரு முறையாகத் துடைத்துப் போட்டுக்கொண்டே.

"ஓய், சும்மா அளக்காதீர்! உண்மையைச் சொல்லும், நீர் எத்தனையாவது தடவையாக இந்தப் படத்தைப் பார்க்க வந்திருக்கிறீர்?" என்றார் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அவர் நண்பர்.

"உம்மைப் போல் நாலாவது தடவையாகப் பார்க்கவில்லை சுவாமி, இரண்டாவது தடவையாகத்தான் பார்க்க வந்திருக்கிறேனாக்கும்!" என்றார் இவர் ரோசத்துடன்.

"எல்லாம் எனக்குத் தெரியும், ஓய்! இந்தப் படத்தை நீர் ஆறாவது தடவையாகப் பார்க்கிறீர்! அதிலும் சும்மா பார்க்கவில்லை; 'ஆபாசம், மகா ஆபாசம்' என்று சொல்லிக்கொண்டே பார்க்கிறீர்!" என்று அவர் மானத்தை வாங்கினார் அவர்.

அதற்குள் அவர்களுக்குப் பின்னாலிருந்தும், "ஸ், சைலன்ஸ்" என்ற சத்தம் கிளம்பவே, தியேட்டரில் அமைதி நிலவியது.

"ஆஹா! இந்த அமைதி நம் கோயில்களில் நிலவினால் எவ்வளவு அழகாயிருக்கும்!" என்றாள் நீலா.

"அங்கெல்லாம் இப்படி யார் ஆடுகிறார்கள்?" என்றான் மாதவன்.

அதற்குமேல் அவர்களைப் பேசவிடாமல், "சைலன்ஸ் ப்ளீஸ், சைலன்ஸ் ப்ளீஸ்!" என்ற ரசிக மகாஜனங்களின் கூக்குரல்கள் நாலா பக்கங்களிலிருந்தும் கிளம்பவே, "பக்தி பூர்வமாக இந்தப் பாடாவதி படத்தைப் பார்ப்பவர்கள் பார்க்கட்டும்; நாம் வேறு எங்கேயாவது போய்த் தொலைவோம்; வாருங்கள்!" என்று நீலா சட்டென்று எழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/123&oldid=1384963" இலிருந்து மீள்விக்கப்பட்டது