விந்தன்
125
'அவர் என்னை நினைக்காதபோது நான் மட்டும் அவரை ஏன் நினைத்துக்கொண்டிருந்தேன்?'
'அவர் என்னை நினைக்காதபோது நான் மட்டும் அவரை ஏன் நினைத்துக்கொண்டிருந்தேன்?'...
தன் உள்ளத்தில் அடுத்தடுத்து எழுந்த இந்தக் கேள்விக்கு அவள் கண்ட விடை இது:
'அவர் என்னை நினைக்காத போது நான் மட்டும் அவரை நினைத்துக்கொண்டிருந்தது என் தவறுதான்!'
இதையும் அவள் தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் அவனிடம் தெரிவித்தபோது, அவன் சொன்னான்:
"நீ என்னை நினைத்தது உன் தவறு என்றால், உன்னை நான் நினைக்காமல் இருந்தது என் தவறாக அல்லவா ஆகி விடும்?"
அவள் சிரித்தாள்; சிரித்துவிட்டுக் கேட்டாள்:
"ஆமாம், நீங்கள் ஏன் என்னை நினைக்கவில்லை?"
"உன்னுடைய அசட்டுத்தனம்தான் அதற்குப் பெரும்பாலும் காரணமாயிருந்திருக்க வேண்டும்!"
"அடக்கத்துக்குப் பெயர் அசட்டுத்தனமா?"
இப்போது அவன் சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:
"இவ்வளவு தூரம் நீ பேசுவாய் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!"
"அது உங்கள் குற்றமல்ல; இதுவரை நான் உங்களுடன் இவ்வளவு தூரம் பேசாமல் இருந்தது என் குற்றம்!"