விந்தன்
127
"அவசரப்பட்டு விட்டீர்களே!"
"அது இப்போதுதானே தெரிகிறது எனக்கு!"
"ஆமாம், நீங்கள் மதனாவைக் கலியாணம் செய்து கொண்ட விஷயம் உங்கள் பெற்றோருக்குத் தெரியுமா?"
"தெரியும்."
"அப்படியானால் அவர்களுடைய சம்மதத்துடன்தான் நீங்கள் மதனாவைக் கலியாணம் செய்து கொண்டீர்களா?"
"இல்லை; அப்படி நடந்திருந்தால் அவர்கள் ஏன் என்னைத் தனியாக விட்டுவிட்டு ஊருக்குப் போயிருக்கப் போகிறார்கள்?"
"அட, கடவுளே! அது தெரியாத என் பெற்றோர், இப்போது அவர்கள் இருக்கும் ஊருக்கல்லவா போகப் போவதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!"
"போகட்டும்; அங்கே போய் அவர்களாக விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் வரையிலாவது நீ என்னைக் கொஞ்சம் இங்கே நிம்மதியாக இருக்கவிடேன்!"
"கவலைப்படாதீர்கள்; அந்த நிம்மதி என்னால் இன்று மட்டுமல்ல; என்றும் கெடாது."
"இப்போதைக்கு அது போதும். வா, போவோம்."
"எங்கே?"
"இதோ, நாம் போகவேண்டிய பஸ் வந்துவிட்டது!"
"சரி, வாருங்கள்."
இருவரும் மற்றவர்களைப் போலவே தாங்களும் முண்டியடித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறினார்கள்!