பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 சுரதா ஒர் ஒப்பாய்வு كيفي 'முருகு ஒரு பெரிய சிக்கல்! கண்ணதாசன் இன்று வரமுடியவில்லை என்று சொல்லிவிட்டார். பிற்பகல் சுரதாதான் கவியரங்கத் தலைமை ஏற்க வேண்டும். சுரதாவைச் சமாளிப்பது உங்கள் பொறுப்பு!" என்று அழாக்குறையாகச் சொன்னார் கருணானந்தம். எனக்கு மிகவும் சங்கடமான நிலை. சுரதா மானப் பிரச்சனையில் எப்போதும் விட்டுக் கொடுக்காதவர். நான் சுரதா அருகில் சென்று நின்றேன். 'என்ன? -சுருக்கென்று சுரதாவின் கேள்வி தைத்தது. 'என்னோடு வாருங்கள், சொல்கிறேன்" என்று சொல்லி அவரை அழைத்துக்கொண்டு கார் அருகில் சென்றேன். 'காரில் ஏறுங்கள் என்றேன். அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுக் காரில் ஏறிக்கொண்டார். 'நேராக வைத்தீஸ்வரன் கோயில் லாட்ஜுக்கு ஒட்டு' என்று காரோட்டியிடம் சொன்னேன். சுரதா புரிந்துகொண்டார். கவிஞர் கண்ணதாசனின் சாதிப் பெயரைச் சொல்லி,....வரலியா?" என்று கேட்டார். 'நீங்கள்தான் இன்று கவியரங்கத் தலைவர்' என்று சொன்னேன். ஆத்திரமும் கோபமும் கலந்த சொற்களால் சுரதா என்னை அருச்சிக்கத் தொடங்கி