பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ക്ല சுரதா ஒர் ஒப்பாய்வு 177 அவரைப்பற்றி நான் ஆங்கிலக் கவிஞர்களுள் மிகவும் சுவையானவன் பைரன்; ஃபிரஞ்சுக் கவிஞர்களுள் மிகவும் சுவையானவர் போதலேர். தமிழ்க் கவிஞர்களுள் மிகவும் சுவையானவர் சுரதா. சுரதாவோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு இந்த உண்மை விளங்கும். சுரதாவே ஒரு சுவையான கவிதை. அரை நூற்றாண்டுக் காலம் அவர் சுவையில் ஊறிப் போனவன் நான். தமது குருநாதர் சுப்புரத்தினத்தைப் போலவே சுரதாவும், புரிந்துகொள்ள முடியாத விசித்திரப் போக்குகளும், முரண்பாடுகளும் மிக்கவர்; கவிஞன் என்ற முனைப்பான செருக்கும் முரட்டுத்தனமும் உள்ளவர். ஆனால் இப் பண்புகள் யாவும் அவரை அணி செய்கின்றனவே தவிர, இழிவுபடுத்தவில்லை. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால், அவருடைய உள்ளத்தின் நுட்பமான பரிமாணங்களை, இக் குணங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. சு - 12