182 கவிஞர் முருகு சுந்தரம் شغ பெற முடியும். எனவே சுரதாவைப் பின்பற்றி எழுதிய வர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆங்கிலக் கவிஞருலகில்கூட, மெய்விளக்கக் கவிஞர்கள் ஒரு நூற்றாண்டுக்காலம்தான் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களுள் ஐந்தாறு கவிஞர்களே குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள். தமிழகத்தில் சுரதாவைப் பின்பற்றி எழுதிய கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் நான், நீலமணி, பொன்னிவளவன், பனப்பாக்கம் சீத்தா, நன்னியூர் நாவரசன், எழில் முதல்வன், புதுமைவாணன் ஆகியோர். டாக்டர் எழில் முதல்வனின் தொடக்கக்கால வளர்ச்சி விறுவிறுப்பானது. ஆனால் அவர் கவிதைத் துறையை விட்டுவிட்டுத் திறனாய்வுத்துறைக்குச் சென்றுவிட்டார். பொன்னிவளவன் நல்ல விளம்பரத் தோடு வளர்ந்தார். அவர் படைப்புக்களும் நூல்களாக வெளிவந்தன. ஆனால் கவியரங்க மேடைகளில் அவர் கவனம் திரும்பிவிட்டது. நீலமணியைப் பற்றி முக்கியமான ஒரு செய்தியைக் குறிப்பிட்டாக வேண்டும். சுரதா பாணியில், இவர்சுரதாவையும் விஞ்சியவர். கவிதைத் துறையின் தற்காலப் போக்கையொட்டி நானும் நீலமணியும் புதுக் கவிதைப் பக்கம் திரும்பி விட்டோம்.
பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/186
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை