பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கவிஞர் முருகு சுந்தரம் شه கேள்வி: பாவேந்தருக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி? பதில்: பாவேந்தரின் ஆற்றல் பரந்துபட்டது. அவருடைய தொடர்பு என்னைக் கவிஞனாக உயர்த்தியது. பாவேந்தரோடுநான்காண்டுகள். நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. பாவேந்தருடைய கவிதை நூல்களைப் படியெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த காரணத்தால், அவருடைய உத்திகளைப் புரிந்துகொண்டேன். எனது கவிதைத் துறைக்குப் பாவேந்தரே வழிகாட்டி. ஆனால் நான் அவரைப் பின்பற்றி எழுதவில்லை. ஒரு பெருங் கவிஞரைப் பின்பற்றி எழுதினால், நம்முடைய சொந்த வளர்ச்சி பத்தாண்டுகள் பின்தங்கிவிடும். கேள்வி: யாரையும் பின்பற்றாமல் புதிய முறையில் எழுதவேண்டும் என்று நீங்கள் நினைக்கக் காரணம் என்ன? பதில்: நான் ஒரு நாத்திகன். கவிதை ஒரு வரப்பிரசாதம் என்பதை நான் மறுக்கிறேன். கடுமை யாக உழைத்துப் பழைய புலவர்களை வென்று காட்ட வேண்டும் என்ற ஆர்வம் என்னை இளமையில் உந்தித் தள்ளியது. எனக்கு இத்தகைய நம்பிக்கையும், மன உறுதியும் ஏற்பட்டதற்குக் காரணம் பெரியாரின் கொள்கையில் எனக்கிருந்த ஈடுபாடுதான்.