பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 சுரதா ஒர் ஒப்பாய்வு كيني இப்பாடலில் தன்னையும், தன் காதலியையும், பூமியின் இரண்டு அர்த்த கோளங்களுக்கு (Hemispheares) ஒப்பிடுகிறான். இரண்டு அர்த்த கோளங்கள் சேர்ந்ததுதான் பூமி உருண்டை. பூமியின் வடதுருவம் குவிந்தது; குளிர்ந்த பனி படர்ந்தது. பூமியின் மேற்குப் பகுதி சரிவானது. இவர்கள் இருவரின் சேர்க்கையால் உருவாகி யிருக்கும் காதல் உலகின் வடக்குப் பகுதி, குவிவதும் இல்லை; குளிர்வதும் இல்லை; மேற்குப் பகுதி சரிவதும் இல்லை. இவ்விடத்தில் குவிதல் குறை வதற்கும், குளிர்ச்சி செயலற்ற தன்மைக்கும் (inaction), சரிவு காதற்சரிவுக்கும் (decline) குறியீடுகளாகக் கொள்ளவேண்டும். ஜான் டன் காலத்தில் புதிதாக வெளியிடப்பட்ட வானவியல் வல்லுநர் கெப்ளரின் கருத்துக்களே இக்கவிதையில் உவமையாக்கப் பட்டுள்ளன. நாம் தமிழ்க் கவிதையில் காதலரின் நெருக்கத்தை மலரும் மணமும் போல் நகமும் சதையும்போல்' என்று மிகச் சுலபமாகச் சொல்லி விடுகிறோம். ஆனால்ஜான்டன்இந்த நெருக்கத்துக்கு" உவமை கூற பூகோள சாத்திரத்தில் நுழைகிறார்; வடதுருவத்துக்குத் தொலைவான பயணத்தையும் மேற்கொள்கிறார். அவர் உழைப்பை நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.