பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கவிஞர் முருகு சுந்தரம் شه சுரதாவின் கவிதைகளில் அவர் கையாளும் உவமைகளே ஆட்சி புரிகின்றன. உவமைக் கவிஞர்: என்னும் பட்டம் அவரோடு இயல்பாக ஒட்டிக் கொள்கிறது. சுரதாவுக்குச் சிறு பிரபந்தங்களில் ஈடுபாடு அதிகம். அவற்றின் மூலைமுடுக்கில் கூறப்பட்டுள்ள விநோதமான உவமைகளையெல்லாம் சுரதா விழுங்கிச்செரிக்க வைத்திருக்கிறார். உவமை அழகில் உள்ளத்தைப் பறிகொடுத்த சுரதா, பிறர் கூறாத புதிய உவமைகளைக் கூறுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அம்முயற்சியில் வெற்றியும் பெற்றார். சுரதாவின் தேன்மழையில் குமணன்' என்னும் பாடல். நாடிழந்து காட்டில் தலைமறைவாகத் திரிந்த குமண வள்ளலைத் தேடிப் பெருந்தலைச் சாத்தனார் வருகிறார். குமணனிடம் தமது வறுமையை உருக்கமாகப் பாடுகிறார். இரக்கத்தால் உள்ளம் கரைந்த குமணன், எட்டடுக்கு மாளிகையும் நகரும் நாடும் என்வசத்தில் இருக்கையில்நீ வந்திருந்தால் ஒட்டகத்தின் காலடியை ஒத்த முத்தும் ஒளிசிறந்த செம்பொன்னும் தந்தி ருப்பேன் என்று பெருந்தலைச்சாத்தனாரிடம் கூறுகின்றான்.