இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள், 73
சற்று நீ பிரிந்திட்டாலும்
தளருவேன்! தனிமை, நோயால் குற்றிய லுகர மாவேன்!
கொதித்திடும் வெந்நீ ராவேன்!
-இதழ்: சுரதா"(15-4-1968)
ஒவியத்தால் அழகுவரும்; மாந்தர் உண்ணும்
உணவதனால் உடல் செழிக்கும், உறுதி சேரும்.
அமுதுாறும், வாழ்நாளும் வளரும் •
-இதழ்: கரதா(1-5-1968)
முத்தத்தி லேயிருக்கும் இனிமை, நீண்ட
முதிர்கரும்பி லும் இல்லை என்றாள். காதல் நித்திரையி லேசோர்வு ஏற்பட் டாலும்,
நிச்சயமாய் அதைப் போன்ற ஒய்வு இல்லை
-இதழ் காவியம்,28-10-1955)
பூவென்றால் தாமரையே! என்றாள். அந்தப்
பூப்போன்று சிறந்தவள் நீ என்றான் சொக்கன். காவென்றால் குளிர் சோலை என்றாள். அந்தக்
காவைப்போல் காப்பவளே என்றான் சொக்கன்
- நூல்: தேன்.மழை
எதற்கந்தக் கொடிகள்: நெஞ்சில்