இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
74 சுரதா கவிதைகள்
கலையுணர் வில்லை என்றால்
காதலும் கசந்து போகும்.
鲁
குயிலுக்கு மாமரமே கோடை மேடை
கோபுரமே புறாக்கூட்டம் கொஞ்சும் மேடை
மயிலுக்கு மலைக்குறிஞ்சி நிலமே மேடை
மஞ்சந்தான் காதலரின் சிறந்த மேடை
வீரத்தில் ஒருவனுக்கே வெற்றி ! காதல் வித்தையிலே இருவருக்கும் வெற்றி!
முத்துக்கும் ஒளிவழங்கும் முத்தே! என்றன் மூச்சாக இருப்பவனே! முல்லைப் பூவே சத்தத்தில் புவிபிறந்த தென்பர் கட்டித் தங்கத்தில் நீபிறந்தாய் ! அதுவே உன்தாய்.
-இதழ் சுரதா(15.3-1968)
வீரத்தின் அடையாளம் படைக ளாகும்
விவேகத்தின் அடையாளம் கீர்த்தி யாகும்
ஈரத்தின் அடையாளம் தண்ணி ராகும்
இன்பத்தின் அடையாளம் காத லாகும்.
சர்க்கரையே! என்றழைத்தான். உடனே மங்கை சர்க்கரைக்குத் தமிழிற்சொல் இலையோ?
என்றாள்