இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் : 75
அக்காரம் என்றதமிழ்ச் சொல்லுண் டென்றான்.
அதற்குப்பின் அவளிதழைக் கனிபோல் தின்றான்.
கல்வீரன் கண்களினால் கோடு போட்டான். கட்டழகி கால்விரலால் கோடு போட்டாள். வில்லாடும் புருவத்தாள் சொக்க வைத்தாள் விக்கலுக்கு நீர்கேட்டுச் சிக்க வைத்தான்.
- இதழ்: சுரதா(15-3-1968)
ಥಿನಾ।ಹಮ್
நீரூற்றி நகத்தை வளர்ப்பதில்லை-இன்ப நினைவுகள் பிறர்சொல்லிப் பிறப்பதில்லை!
-இதழ்: சுரதா(1-5-1968)
கண்ணில் கிடந்த கனவுகளே காலையில் நிமிரும் நினைவுகளாம்!
ք54-ւ
மரக்கிளை மலர்களோ மலர்ந்தால் மறுபடி குளத்து மலர்போல் கூம்புவ தில்லை. குறையிலார் நட்பும் கூம்புவ தில்லை.