இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் 77
நாணமே டெண்மைக்கு நல்ல மதிப்புரை திருமண வாழ்க்கையே சிறந்த பதிப்புரை
- -நூல்: சுவரும் கண்ணாம்பும்
ஒருவருக் கொருவர்.துணை யாவ தற்கும் ஒட்டியுற வாடிசுகம் காண்ப தற்கும், திருமணமே நல்லதொரு நிகழ்ச்சி யாகும்.
திருமணத்தால் சமுதாயம் சுத்த மாகும்.
岛 離 独
மணமென்றால் புகழாம்! அந்த
வான்புகழ் சிலர்க்கே வாய்க்கும்! மணமென்றால் வாசம், அந்த
வாசமே மலரின் மூச்சாம்: மணம்செய்து கொள்வ தில்லை
மலரினம் நம்மைப் போல! மனமின்றித் தனித்து வாழும்
வாழ்க்கையும் சிறப்ப தில்லை!
-(6.7-70-ல் ஒருதிருமண வாழ்த்தில்)
கலப்புமணம்
நிலத்தில்நாம் உண்டாக்கும் கலப்பை, மக்கள்
நெஞ்சத்தில் உண்டாக்கி விடுவோ மானால்,
கலப்புமணம் உருவாக வழியுண்ட்ாகும்.
கலப்புமணத் தால்சாதி செத்துப்போகும்