பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் 77

நாணமே டெண்மைக்கு நல்ல மதிப்புரை திருமண வாழ்க்கையே சிறந்த பதிப்புரை

- -நூல்: சுவரும் கண்ணாம்பும்

ஒருவருக் கொருவர்.துணை யாவ தற்கும் ஒட்டியுற வாடிசுகம் காண்ப தற்கும், திருமணமே நல்லதொரு நிகழ்ச்சி யாகும்.

திருமணத்தால் சமுதாயம் சுத்த மாகும்.

岛 離 独

மணமென்றால் புகழாம்! அந்த

வான்புகழ் சிலர்க்கே வாய்க்கும்! மணமென்றால் வாசம், அந்த

வாசமே மலரின் மூச்சாம்: மணம்செய்து கொள்வ தில்லை

மலரினம் நம்மைப் போல! மனமின்றித் தனித்து வாழும்

வாழ்க்கையும் சிறப்ப தில்லை!

-(6.7-70-ல் ஒருதிருமண வாழ்த்தில்)

கலப்புமணம்

நிலத்தில்நாம் உண்டாக்கும் கலப்பை, மக்கள்

நெஞ்சத்தில் உண்டாக்கி விடுவோ மானால்,

கலப்புமணம் உருவாக வழியுண்ட்ாகும்.

கலப்புமணத் தால்சாதி செத்துப்போகும்