பக்கம்:சுலபா.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 143

எல்லசம் ஆடிட்டர் குப்தாவுக்கு விவரித்துக் கொண்டுவந்தார். சிவவடிவேலு எப்போது எந்த நிர்ப்பந்தம் காரணமாக நிலங் களே விற்று ஒட்டலில் முதலீடு செய்ய நேர்ந்தது என்பதையும் விவரமாகக் கூறினர்.

"எங்கு பார்த்தாலும் பச்சப்பசேல் என்றிருக்கிறது. இயற்கை அழகும் ஓசை ஒலிகளற்ற, நாய்ஸ் பொல்யூஷன் இல்லாத அமைதியும் எனக்கு மிகவும் பிடிந்தமானவை. இந்த மாதிரிச் சூழ்நிலையில் மலையடிவாரத்தில் ஓர் ஓட்டல் இருந்தால் அது ஸ்விட்ஜர்லசந்தில் தங்கின மாதிரிச் சுகமளிக்கக் கூடிய விஷயம். 'ஹாலிடே ரிஸார்ட் என்று இப்படி இடங்கள் ஐரோப்பாவில் பிரமாதப்படுகின்றன. ஹனிமூன் வருகிற இளம் தம்பதிகள் வரலாம். வீக் எண்ட் டை என்ஜாய் பண்ண வருகிறவர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கலாம், சினிமா வில் கிரா மாந்தர-ரூசல். அவுட்டோருக்காக - லொகேஷன் தேடி வருகிறவர்கள் இங்கே வரலாம். எவ்வளவோ வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அப்படி இருந்தும் உங்கள் கிளையண்ட் சிவவடிவேலு இங்கு ஒரு நவீன ஒட்டலை நஷ்டத் தில் நடத்துவது வேடிக்கைத்தான். நீங்கன் மட்டும் ஒத்துழைத்தால் எல்லாம் ஸ்ெட்ரைட் பண்ணிவிடுவேன்" என்று உறுதியாகச் சொன்னன் குப்தா.

அவன் ஆங்கிலத்தில் கூறிய இந்த விவரங்கனை அருகே இருந்த சிவவடிவேலுவுக்குத் தமிழில் சவிஸ்தாரமாக மொழி பெயர்த்துச் சொன் ஞர் ஆடிட்டர். உடனே சரிப்படுத்தக் குப்தா ஏதாவது மந்திரவாதியா என்ன என்று ஆச்சரியப் பட்டார் சிவவடிவேலு. - -

4

குருபுரத்திற்குள் நுழைந்ததும் கார் நேரே சிவவடிவேலு. வின் பங்களாவிற்குள் போயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/145&oldid=565813" இலிருந்து மீள்விக்கப்பட்டது