பக்கம்:சுலபா.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|Bir etir, 15

ஒரு டிரைவர், ஒரு கூர்க்கா, ஆகியவர்கள் அந்த பங்களாவில் உண்டு. இரண்டு பசுமாடுகள், ஓர் அல்சேஷியன், நாலு பூனைகள், இவை அங்கிருந்த பிராணிகள்.

பங்களாத் தோட்டத்தின் ஒரு கோடியிலுள்ள சின்ன அவுட்ஹவுஸில் தோட்டக்காரனும் அவன் குடும்பமும் குடி இருந்தன. காலையில் பால் கறப்பதும், பசுமாடு களைப் பராமரிப்பதும் கூட அவனிடமும் அவன் மனைவியிடமுமே விடிப்பட்டிருந்தன. கூர்க்காவுக்கு வாசலில் கேட் அருகிலேயே ஒரு சிறிய அறை வசிப் பிடமாக அமைந்தது. தோட்டத்துக் குழாய், அவன் குளிக்கக் கொள்ளப் பயன்பட்டது. இருபத்தைந்து முப்பது மனை விஸ்தீரணமுள்ள பெரிய காம்பவுண்டில் கட்டிடம் இருந்த இடம் உள்ளடங்கிய இரண்டு மனை அளவு மட்டுமே மற்றப் பகுதிகளில் எல்லாம் புல்வெளி, பூஞ்செடி கொடிகள், வாழை, மா. பலா முதலிய மரங்கள் என்று கிளி கொஞ்சும் சோலையா யிருந்தது. அந்தப் பங்களா. வெயிலே உள் நுழைய முடியாது, - -

தோட்டத்து லானில் எப்போதாவது வருஷப் பிறப்பு பொங்கல் என்று அவள் பத்திரிகைக்காரர்களை விருந்துக்கு அழைப்பதுண்டு. இப்போது அம்மாதிரிப் பத்திரிகைக்காரர் களை அழைத்து விருந்து வைத்துப் பரிசுப் பொருள்களைக் கொடுத்துப் பப்ளிஸிடி தேடும் ஆசை கூடக் கழன்று போய் விட்டது. புகழ் பெறுகிற வரை ஆதரிக்க எழுதுவதற்காகப் பத்திரிகைக்காரர்களுக்கு விருந்து. புகழ் பெற்று உச்சிக்கு வந்ததும் வம்புகள் பண்ணுமலிருக்க, எதிர்த்து எழுதாமலிருக்க தொழிலையும் பெயரையும் பாதிக்கிற கிசுகிசுக்களை எழுதாம லிருக்க என்று எதிர் மறையாக ஒரு பாதுகாப்பு முயற்சி என்ப தாகப் பத்திரிகைகளிடம் ஒரு கலைஞனுக்கு இருவகை ஈடுபாடு கள் இருப்பதுண்டு. அதுதான் வழக்கம்.

ஆளுல் வரவர இப்போது கொஞ்ச நாளாக இருவகை ஈடு பாடுகளுமே அவளுக்கு இல்லை. ஏதோ ஓர் இழப்பில், ஏக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/17&oldid=565685" இலிருந்து மீள்விக்கப்பட்டது