பக்கம்:சுலபா.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 23

யும் கவலையையும் உணர்ந்தது. விசக்தியை அடைந்தது. ஆடிட்டரோடு கலந்து பேசி இந்தச் சொத்தை எல்லாம் ஒரு டிரஸ்ட் ஆகப் பண்ணி நல்ல காரியங்களுக்காக ஒதுக்கி விட்டு விட்டு-எங்காவது பெண்களுக்கான சேவா சிரமத்தில் சேர்ந்து விடலாமா என்றுகூட அவளுக்குச் சமய சமயங்களில் தோன்றியிருக்கிறது உண்டு.

செலவழிக்கப் பணமில்லாமல் கோடிக்கணக்கான ஏழை கள் ஒருபுறமும் கோடிக் கணக்கில் வந்து குவிந்துகொண்டிே இருக்கும் பணத்தை எப்படிச் செலவழிப்பதென்று தெரியாமல் தன்னைப் போல் தவிக்கும் சிலருமாக வாழ்க்கை முரண்படுகிற எல்லைகளை அவள் சிந்தித்தாள். மனம் மேலும் குழம்பியது.

"எஸ்.பி.எஸ். பார்க்க வந்திருக்கிருர் அம்மா! வரச் சொல்லட்டுமா?’’-கவிதாவின் குரல் சுலபாவை இந்த உலகிற் குக் கொண்டு வந்தது. எஸ்.பி.எஸ். தான் அவள் எதிர் பrtத் துக் காத்திருந்த புரொட்யூலர். நிச்சயம் பணத்தோடுதான் வந்திருப்பார். ஸ்டுடியோவுக்குப் புறப்பட வேண்டியிருக்கும். கவிதா சுலபாவின் காதருகே வந்து, 'அந்த ஃபாரின் டிரிப்' விஷயம் ஞாபகப்படுத்தச் சொன்னிங்களே?' என்று நினை ஆட்டிள்ை.

4.

தயாரிப்பாளர் எஸ்.பி.எஸ்.கையில் ஒரு அழகான மஞ்சள். நிற ஃப்ரீப் கேஸ்டுடன் நரி நுழைவது போல் பம்மிப் பம்மி உள்ளே நுழைந்தார். அவர் வந்து இறங்கிய மழமழ என்று. பெயிண்ட் மின்னிப் பளபளக்கிற ஏ. சி. டீலக்ஸ் டயோட்டா போர்ட்டிகோவில் கம்பீரமாக நின்றது. மிகுந்த தயக்கத் தோடு பங்களா முன்வராந்தாவில் இருந்த சோபாக்களில் ஒன்றில் உட்கார்ந்த அவரை, “உள்ளே வாங்க ! அம்மா கூப்பிடருங்க"-என்று கவிதா வந்து உள்ளே அழைத்தாள். கூலிங்கிளாஸைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு மற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/25&oldid=565693" இலிருந்து மீள்விக்கப்பட்டது