பக்கம்:சுலபா.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 59

அப்புறம் இந்த வெறுப்பு. விரக்தி, எல்லாமே மிதக்க முடியா மற் போய் விடும்" - --

இன்று கோடிக் கணக்கான இரசிகர்களின் கனவில் அழகியாக அங்கீகரிக்கப்பட்டுவிட்ட நான் அதைப் பிடிவாத மாக அங்கீகரிக்க மறுத்த ஒருவனைப் பழிவாங்கவே அந்தரங்க மாக விரும்புகிறேன்'

விரும்பினுல் மட்டும் போதுமா? அந்த ஒருவன் அகப்படி வேண்டுமே? அப்படியே அகப்பட்டாலும் அவன் பழையபடி தாள் இருப்பான் என்பது என்ன நிச்சயம்? ஒரு வேளை இன்று அவன் உன்னைக் காமுறலாம்" r - -

"காதலோ காமமோ அவனுடைய வசதிக்காக என்னிடம் காத்திருக்கவில்லை." - - --

"ஆல்ை நீ இன்னும் ஏங்கிக் கொண்டிருக்கிருயே?'

'இது ஆசை தீர்வதற்கான ☞ຂໍ້ສເoo! அதே மாதிரித் தோற்றமுள்ள மேல் வர்க்கத்துப் பரிசுத்தவான் ஒருவனைச் சீரழித்தால் கூட என் வேகம் தணிந்து விடலாம்" --

துர்த் தேவதைகளின் கோபத்தைத் தணிக்கத்தான் ஆடு கோழிகளைப் பலி கொடுப்பார்கள் சுலபா!'

'குப்பையரெட்டி விஷயத்தில் நானும் ஒரு துர்த் தேவதையாகத்தான் காத்திருக்கிறேன். என் பலிகளில் தான் உள் வெறுப்புத் தணியும்,' .

மேலும் அடுத்த ரவுண்டுக்காக அவள் கிளாலை நீட்டிய போது கோகிலா இதமாக மறுத்து அவளைக் கைத்தாங்கலாக டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்ருள். சுலபாவுக்குள் இத்தனை வேதனைகள், ஏக்கங்கள், அந்தரங்கங்கள், பழி வாங்கல் உணர்வுகள் நிரம்பியிருக்கும் என்று கோகிலா எதிர் பார்க்கவில்லை. சுலபா அவள் நடித்த படங்களில் எல்லாம் ஏற்றவற்றை விடப் பெரிய சுயமான குணசித்திரத்தைத் தனக் குள் தாகை ஏற்று நடமாடிக் கொண்டிருந்தது புரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/61&oldid=565729" இலிருந்து மீள்விக்கப்பட்டது